க.பொ.த சா/த பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி!

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் காலி சங்கமித்தா மகளிர் பாடசாலையின் ஹிருணி மல்ஷா முதலாமிடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு மியூஸியஸ் கல்லூரியின் குளுனி மெத்சலா மற்றும் குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையின் விமங்ஸா ஜயன ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

www.results.exams.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பரீட்சை பெறுபேறுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறு பத்திரம், க.பொ.த உயர்தர கற்றலுக்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Recent Videos

Special News

sritharan
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சிறீந்திரன் வேண்டுகோள்!
death
யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
parliament
கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்,அநுர எடுத்த அதிரடி!
Maithripala-Sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என மைத்திரி பகிரங்கம்!
coconut
உச்சம் தொட்ட தேங்காய் விலை!
farmer
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்!