யாழ்ப்பாணத்தில் கிணற்று தொட்டி அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்!

யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார்.

கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

mullivaikkal-remembrance-day
துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய வெளிநாட்டு பிரஜைகள்
Sri Lankan Civil War
🔴 VIDEO உயிரற்ற உடல்களில் இருந்து நகைகளை திருடிய இராணுவம்! - வெளிவந்த சாட்சியம்
shritharan
🔴VIDEO - கனடா நினைவுத்தூபி விடயத்தில் ஒன்று சேரும் சிங்கள தலைவர்கள்: சிறிதரன் ஆதங்கம்..!
Npp Member 1
தேசிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறிய யாழ் உறுப்பினர்..!
Badulla threewheel news 1
பதுளையில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட முச்சக்கரவண்டிகள் மீட்பு!
aanairavu protest (2)
ஆனையிறவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!தொடரும் பதற்றநிலை!