யாழ்ப்பாண நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை காவல்துறை பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் (Kandy) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இலட்சம் பணம் பறிப்பு
மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று காவல்துறை புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து 30 இலட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தல்

இதனடிப்படையில் சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் (17) கைதான பிரதான சந்தேக நபரை இன்று (18) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கண்டியில் இன்று கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!