நாட்டில் வாட்ஸ்அப் கணக்குகள்ஹேக், அவதானம் மக்களே!

இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையக் குற்றவாளிகள் பொதுமக்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவதற்கு சரிபார்ப்புக் குறியீட்டினை (OTP) பயன்படுத்துகின்றனர்.

திடீரென வாட்ஸ்அப் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், மோசடி செய்பவர்கள் பயனர்களைத் தொடர்புகொண்டு, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ காட்டிக்கொண்டு, சரிபார்ப்புக் குறியீட்டைக் கோருவதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு ஒருமுறை சரிபார்ப்புக் குறியீட்டினை வழங்கியவுடன் குறித்த கணக்குள் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகின்றன.

இதேவேளை, வாட்ஸ்அப் கணகை ஹேக் செய்தவுடன் அதில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு அவசர உதவியாக சிறு தொகை பணத்தை கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், அந்த பணத்தை பெற பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு இலக்கமும் ஏனையவர்களிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!