பலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, லிஹினியகல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இரவு ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில், கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து, தூங்கிக் கொண்டிருந்த தாயின் வயிற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கடும் வேதனையால் துடித்த தாயை உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!