மனைவியைத் தாக்குவதைத் தடுத்த மாமனாரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததற்காக மருமகன் கைது!

மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்ததையடுத்து, மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மருமகன் மகளை தாக்கியதை தந்தை கண்டுள்ளார்.

அவ்வேளை தனது மருமகனின் செயலை கண்டித்தவரின் தலையில் மருமகன் பொல்லால் அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த தந்தை கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

laxmi
லட்சுமி ஜெயந்தி அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற இப்படி வழிபட மறக்காதீர்கள்.
WEATHER
நாட்டில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!
death
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு, எந்த நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
trump
இலங்கைத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப், நழுவும் அநுர!
digetal
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!
jaffna
யாழ் குடும்பம் ஒன்றின் மனிதாபிமானம்!