பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடந்து நீடிக்கும்…

பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்குவதற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில், தடையை நீக்குவதற்கான மனு பரீசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு” கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!