பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று !

சர்வதேச மட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்றாகும்.

இந்த தேர்தலில், இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 6 பேர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் களமிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பிரித்தானிய தேர்தல் தொடர்பாக தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் படி, தொடர்ந்தும் தொழிற்கட்சிக்கே அதிக ஆதரவு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும், சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும், லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் மற்றும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், இன்றைய தேர்தலின் பின் வெளிவரும் முடிவுகளே, பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!