அரச வங்கியை அதிரவைத்த ரூ. 99.3 மில்லியன் மோசடி! மூன்று பெண் அதிகாரிகள் கைது!

பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் செயல்படும் ஒரு அரச வங்கியில், குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து ரூ. 99,370,100 வரை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சந்தேகநபர்கள் அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 36 வயதுடைய உதவி அதிகாரியாகும். அவர் பாணந்துறையில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டார். 37 வயதுடைய இடைநிலை நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஒருவர் விஹார வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kanavan manavi
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
15 people died in Sri Lanka in 24 hours
இலங்கையில் 24 மணி நேரத்தில் 15 பேர் பலி.
skynews-hospital-beer-sheva_6945606
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!
baba
காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
nari
நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!
tna
தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..