கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நீதவான் முன்னிலையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
