கனடாவில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி, 25 பேர் காயம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!