பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து : 21 பேர் படுகாயம்

சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்து ஓட்டுநர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்