பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து : 21 பேர் படுகாயம்

சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்து ஓட்டுநர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!