தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..

யாழ்ப்பாணம்- வலிகாமம் கிழக்கு பிரதேசசபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி- தமிழ் தேசிய பேரவை அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து உள்ளூராட்சிசபைகளை அமைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையையும் குறிப்பிட்டே, அந்த முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி தோல்வியடைய வைத்தது.

எம்.ஏ.சுமந்திரன் பல காரணங்களின் அடிப்படையில் கூட்டு பேச்சை வெற்றியடைய வைக்காத நிலையில், கட்சித்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான முதலாவது சந்திப்பிலேயே, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையை யாருக்கும் விட்டுத்தர முடியாது என கறாரான குறிப்பிட்டிருந்தார். பின்னர், வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தமிழரசு கட்சியே வைத்திருக்கட்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்த பின்னரும், யாழில் வேறு 2 பிரதேசசபைகளை வழங்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டு, கூட்டணி பேச்சை முறித்திருந்தனர். இது முட்டாள்தனமான நகர்வு என கட்சிக்குள்ளும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அந்த விமர்சனங்களை மெய்ப்பிப்பதாக உள்ளூராட்சி நிர்வாக தெரிவுகள் அமைகின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இலங்கை தமிழரசு கட்சி கூட்டணி அமைத்திருந்தால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 2 ஆசனங்களை வழங்கியிருக்க வேண்டும். வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியிருக்கும். யாழின் ஏனைய 14 சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைத்திருக்கும். தற்போதைய நிலையில் யாழில் 9 சபைகளில் மட்டுமே தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை சில சமயங்களில் குறையவும் கூடும்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையின் தீர்மானங்களால் அதிருப்தியடைந்துள்ள பிரதேசசபை உறுப்பினர்கள், இரகசிய வாக்கெடுப்பில் காலைவாரும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. நேற்று கரவெட்டி பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்புக்கு வாக்களித்தருக்கலாமென கருதப்படுகிறது. இதில் 1 வாக்கு வித்தியாசத்தில் இலங்கை தமிழரசு கட்சி மயிரிழையில் தப்பிப்பிழைத்தது.

இன்று வலிகாமம் கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியின் 2 உறுப்பினர்கள் எதிர்தரப்புக்கு வாக்களித்திருக்கலாமென நம்பப்படுகிறது.

வலி கிழக்கு பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி 11 உறுப்பினர்களையும், அதன் கூட்டணி கட்சிகளான ஈ.பி.டி.பி 1, தமிழ் மக்கள் கூட்டணி 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

தமிழ் தேசிய பேரவை 5, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன.

தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களை கொண்டிருந்தது.

ஈ.பி.டி.பியிலிருந்து பிறிந்தவர்கள் சுயேட்சையாக களமிறங்கி 2 ஆசனங்களையும், மற்றொரு சுயேட்சை அணி 1 ஆசனத்தையும் கொண்டிருந்தது.

இன்றைய சபை ஆரம்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெளியேற்றப்பட்டார்.

அடுத்த வாக்கெடுப்பு இரகசியமா, பகிரங்கமா என தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இரு தெரிவுகளுக்கும் சம எண்ணிக்கையான வாக்கெடுப்புக்கள் கிடைத்ததையடுத்து, திருவுள சீட்டு முறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதில் இலங்கை தமிழ் அரசு, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் அணி கூட்டணிக்கு 12 வாக்குகள் கிடைத்தன. (அங்கிருந்த இருவர் எதிர்தரப்புக்கு வாக்களித்தனர். கட்சி தலைமையின் முடிவை ஓரளவு பகிரங்கமாக எதிர்த்து வந்த 2 தமிழரசு கட்சி உறுப்பினர்களே அவர்கள் என கட்சி தலைமை சந்தேகிக்கிறது)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவை கூட்டின் வேட்பாளர் தியாகராசா நிரேஸ் 15 வாக்குகளை பெற்றார்.

இதன்மூலம் தியாகராசா நிரோஸ் மீண்டும் வலி கிழக்கு பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்கிறார். கடந்த நிர்வாகத்திலும் அவரே தவிசாளராக செயற்பட்டார். கடந்த 3 உள்ளூராட்சிசபைகளில் வலிகாமம் கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்க முடியாமல் திண்டாடி வருகிறது. pagetamil

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்