பொறாமையால் ஆறு வயது தம்பியை கொலை செய்த அண்ணன் !

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டம் டிட்லாகர் பகுதியில், 12 வயது பூபேஷ் என்பவர் தனது 6 வயது தம்பியை கொடூரமாக கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைவாக இருப்பதாக எண்ணிய மூத்த சகோதரன், பொறாமை மற்றும் கோபம் காரணமாக இந்த கொலைச்சம்பவம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலிஸ் விசாரணையில், பூபேஷ் தம்பியை விரும்பாததையும், வீட்டில் அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவ நாள், இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது, சமையலறையில் இருந்த 6 அங்குலம் நீளமான கத்தியை பயன்படுத்தி தம்பியின் கழுத்தில் குத்தியதாகவும் கூறினார். இதன் பின்னர் உடலை வீட்டின் பின்னாலே புதைத்துள்ளார்.

பின்னர் குடும்பத்தினர் தூங்கிய பிறகு இரவு 1 மணியளவில், தாயின் புடவையின் உதவியுடன் பூபேஷ் உடலை வீட்டுப் பின்புறத்திலிருந்து தோண்டி எடுத்தார். பின்னர், சுமார் 300-400 மீட்டர் தொலைவில் வேறு இடத்தில் உடலை மறைத்து புதைத்துள்ளார். தாயின் சந்தேகம் மற்றும் விசாரணை தொடர்ந்து இந்த கொடூரம் வெளிச்சம் பெற்றது. இந்தநிலையில் குற்றவாளி சிறார் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

இந்த கொலை வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் பொலிசார் மிகுந்த தீவிரத்துடன் விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!