மீட்கப்பட்ட குண்டு துளைக்காத கார் : இந்தியத் தூதரகத்திடம் விளக்கம்!

கொழும்பை – நுகேகொட பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் ஒன்றை மேல் மாகாண குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

இது 2008ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜேர்மன் தயாரிப்பான பென்ஸ் ரக கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கத் தகடு இல்லாத இந்த கார் அதிக எடை காரணமாக சந்தேகிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

விசாரணையில், இது 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் இறக்குமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த கார் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்தக் கார் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!