மர்ம பொருளை ஏவி சோதனை நடத்திய வடகொரியா: எழுந்துள்ள குற்றச்சாட்டு!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து பாரிய இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், வடகொரியா இன்று (சனிக்கிழமை) கிழக்கு கடல் பகுதியை நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஏவிச் சோதனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

வடகொரியா ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் (Ballistic) வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே கடலில் விழுந்துள்ளதாக ஜப்பானிய கடலோர காவல்படை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் ‘Freedom Shield’ எனப்படும் 11 நாட்கள் நீடிக்கும் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சியானது தமது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என வடகொரியா தொடர்ந்து சாடி வருகிறது.

முன்னதாக இந்த வாரம், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங், இந்தப் பயிற்சிகளுக்கு எதிராக “கற்பனை செய்ய முடியாத மோசமான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அமெரிக்க நிர்வாகம் மற்றும் தென்கொரியாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் 2019ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்தத் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் பிராந்திய பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna news
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
fuel
எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
Fraser,Heights,,Surrey,,Vancouver,,British,Columbia,,Canada,-,February,6,
கனடாவில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்
iran
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை: ஈரான் எச்சரிக்கை
jaffna
யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது
Klangan Referral Hospital
கிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை