மாத்தளையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் சோகம்: மண்சரிவில் சிக்கித் தாய், மகள்கள், பேரன் உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன், கினிகத்தென – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் மாத்தளையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் வீட்டில் வசித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய் குசும் ரத்நாயக்க, மூத்த சகோதரி ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, இளைய சகோதரி மனேல் குமுதுனி ரத்நாயக்க, மகன் மஹின்ச தினேத் ரத்நாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!