மாங்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டப்பட்டது ஈபிடிபி கொடியை ஒத்த கொடியா?

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் தாங்கி வந்த கொடி குறித்து சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கை தமிழரசு கட்சியின் கொடியிலும் காணப்படுகிறது. ஆனால் அந்த நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் இருக்கிறது.

ஈபிடிபி கட்சியின் கொடியானது முதலாவதாக பச்சை வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக மஞ்சள் வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும். இதனை படம் – 01இல் காணலாம்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடியின் நிறங்களின் ஒழுங்கமைப்பானது முதலாவதாக மஞ்சள் வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக பச்சை வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு சரியான ஒழுங்கிலேயே வர்ணங்கள் அமைந்திருந்தன. இதனை படம் – 02இல் காணலாம்.

ஆனால் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் ஈபிடிபியின் கட்சி கொடியின் வர்ண ஒழுங்கினை ஒத்த ஒழுங்கே காணப்பட்டது. இதனை படம் – 03இல் காணலாம்.

நாடுகளின் கொடிகளிலோ, கட்சிகளின் கொடிகளிலோ, வேறு அமைப்புக்களின் கொடிகளிலோ வர்ணங்களின் ஒழுங்கமைப்பை மாற்றும் முறை காணப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியானது இவ்வாறு ஒழுங்கினை மாற்றி கட்சி கொடியை அமைத்தமை சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!