மாங்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டப்பட்டது ஈபிடிபி கொடியை ஒத்த கொடியா?

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் தாங்கி வந்த கொடி குறித்து சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கை தமிழரசு கட்சியின் கொடியிலும் காணப்படுகிறது. ஆனால் அந்த நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் இருக்கிறது.

ஈபிடிபி கட்சியின் கொடியானது முதலாவதாக பச்சை வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக மஞ்சள் வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும். இதனை படம் – 01இல் காணலாம்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடியின் நிறங்களின் ஒழுங்கமைப்பானது முதலாவதாக மஞ்சள் வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக பச்சை வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு சரியான ஒழுங்கிலேயே வர்ணங்கள் அமைந்திருந்தன. இதனை படம் – 02இல் காணலாம்.

ஆனால் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் ஈபிடிபியின் கட்சி கொடியின் வர்ண ஒழுங்கினை ஒத்த ஒழுங்கே காணப்பட்டது. இதனை படம் – 03இல் காணலாம்.

நாடுகளின் கொடிகளிலோ, கட்சிகளின் கொடிகளிலோ, வேறு அமைப்புக்களின் கொடிகளிலோ வர்ணங்களின் ஒழுங்கமைப்பை மாற்றும் முறை காணப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியானது இவ்வாறு ஒழுங்கினை மாற்றி கட்சி கொடியை அமைத்தமை சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!