மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டம்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா செலவிடப்படும். 15 இலட்சம் ரூபா செலவை “அதிகம்” எனக் கூறிவிட்டு, 180 இலட்சம் ரூபா செலவை ஏற்க அரசாங்கம் தயாராவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மின்சார சபையை இரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கு அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கம் தன்னிச்சையாக முன்னெடுத்தால், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!