முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டியின் போது மேட்ச் பிக்சிங் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கிடையில், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரா செனநாயக்கக்கு எதிராக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டு விவரம்:

2020-ஆம் ஆண்டு நடைபெற்ற LPL தொடக்க சீசனில், சச்சித்ர சேனாநாயக்க, ‘கொழும்பு கிங்ஸ்’ அணியின் வீரர் தரிந்து ரத்நாயக்கவை துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு பிரிவிற்கு புகார் அளிக்கவிருந்த ரத்நாயக்கவிற்கு, அதனைத் தடுக்கும் நோக்கத்தில் ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்பு மற்றும் ஆதாரங்கள்:

2020 ஆம் ஆண்டு, LPL தொடக்க சீசனில் பங்கேற்க இருந்த இரு வீரர்களை, துபாயிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வற்புறுத்தியதாக சேனநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குரல் பதிவுகள், ஆடியோ மாதிரிகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவை ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சட்ட நடவடிக்கை:

வழக்கின் கீழ், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை, அல்லது ரூ. 10 கோடி (Rs. 100 million) வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த சட்டம் 2019-இல் முன்னாள் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொண்டு வந்தது.

வீரர் பற்றிய சிறப்பு தகவல்

சச்சித்ர சேனாநாயக்க, இலங்கையின் 2014 ஆம் ஆண்டு ICC T20 உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய உறுப்பினராக விளங்கியவர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!