2 கோடி ரூபா கொள்ளை விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைதாகித் தடுப்புக் காவலில்!

சீனப் பிரஜையொருவரிடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டாரவை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 24 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.

சீனப் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!