தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாலும், அவர்கள் தோல்வியையே சந்தித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் எல்லா விடயங்களிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் காரியங்களைக் குழப்பிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

“இந்த அரசாங்கத்திடம் சில நேர்மறையான விடயங்களை நாங்கள் காண்கிறோம், ஆனால் பெரும்பாலானவை எதிர்மறையாக இருப்பதே பிரச்சினையாக உள்ளது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்