எரிவாயு தட்டுப்பாடு : நாடு தழுவிய ரீதியில் தீவிர சோதனைகள் ஆரம்பம்!

சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சில வர்த்தகர்கள் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக எரிவாயு கிடைக்காததால், பல பகுதிகளில் உள்ள உணவகங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!