இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்தவகையில், நேற்று (19) முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு பின் 2000 ரூபாயால் அதிகரித்து 370,000 ரூபாயாக, விற்பனையானது.

இந்நிலையில், இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதே உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் உலகளாவிய முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஈர்த்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!