தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை ரூ. 1,550 ஆக உயர்த்தவும், தினசரி வருகை ஊக்கத்தொகையாக ரூ. 200 வழங்கவும் முன்மொழிந்தார்.

இந்த திட்டங்களை செயல்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு தோட்ட நிறுவனங்கள் மூலம் தொடர்புடைய ஊக்கத்தொகையை செலுத்தவும், அதன் பின்னர் அதை நேரடியாக தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முறையின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை செலுத்த தொழிலாளர் அமைச்சரும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரும் சமர்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!