தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை ரூ. 1,550 ஆக உயர்த்தவும், தினசரி வருகை ஊக்கத்தொகையாக ரூ. 200 வழங்கவும் முன்மொழிந்தார்.

இந்த திட்டங்களை செயல்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு தோட்ட நிறுவனங்கள் மூலம் தொடர்புடைய ஊக்கத்தொகையை செலுத்தவும், அதன் பின்னர் அதை நேரடியாக தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முறையின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை செலுத்த தொழிலாளர் அமைச்சரும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரும் சமர்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!