எரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மாநகர சபையின் நிதிக்குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஏகமனதாக இணக்கம் தெரிவித்து அதனை நிறைவேற்றியுள்ளது.

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்த நடைமுறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் பிரதி மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!