இலங்கை கடலில் கரையொதுங்கிய இந்திய ஏவுகணை பாகங்கள்!

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று (28.12.2025 ) குறித்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் குறித்த பாகத்தை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணையின் கழன்று விழுகின்ற பாகங்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!