வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

பொது மக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களின் விலையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது மக்கள் வாங்கக்கூடிய Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000 சிசி வகை வாகனங்களுக்கான வரியைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பொதுவான Wagon R காருக்கு சுமார் 4 மில்லியன் ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. சிறிய வாகனம், சராசரி நடுத்தர வர்க்கத்தினரால் வாங்கப்படுகிறது.

இது நல்ல எரிபொருள் பயன்பாட்டை கொண்டுள்ளது. முடிந்தால், அத்தகைய வாகனங்களை பிரபலப்படுத்த வேண்டும் என பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவு காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரிடர் காரணமாக மக்களின் பொருளாதார நிலைமை சரிந்துள்ளது. எங்களிடம் விண்ணப்பம் செய்தவர்கள் தாங்கள் இறக்குமதி செய்த வாகனங்களை வாங்க முடியாத நிலையை அடைந்துள்ளனர். 3 மாதங்களுக்கு பின்னர் 3 சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே, இந்த பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தால் இந்த 3 சதவீத வரியை நீக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!