மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு: நாட்டை உலுக்கிய சம்பவம்

கண்டி, உடுதும்பர தலகுனே பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான தாய் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

34 வயதான கணவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிள்ளைகள் தற்போது உடுதும்பர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணும் மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!