மர்ம பொருளை ஏவி சோதனை நடத்திய வடகொரியா: எழுந்துள்ள குற்றச்சாட்டு!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து பாரிய இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், வடகொரியா இன்று (சனிக்கிழமை) கிழக்கு கடல் பகுதியை நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஏவிச் சோதனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

வடகொரியா ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் (Ballistic) வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே கடலில் விழுந்துள்ளதாக ஜப்பானிய கடலோர காவல்படை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் ‘Freedom Shield’ எனப்படும் 11 நாட்கள் நீடிக்கும் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சியானது தமது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என வடகொரியா தொடர்ந்து சாடி வருகிறது.

முன்னதாக இந்த வாரம், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங், இந்தப் பயிற்சிகளுக்கு எதிராக “கற்பனை செய்ய முடியாத மோசமான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அமெரிக்க நிர்வாகம் மற்றும் தென்கொரியாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் 2019ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்தத் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் பிராந்திய பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!