வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 11.05.2026ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு குறித்த வீதியினை தடுத்து எல்லையிடப்பட்டுள்ள இடப்பரப்புக்குள் வதியும் தங்களிற்கு 1987ஆம் ஆண்டின 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவிற்கமைவாக அறிவித்தல் இத்தால் வழங்கப்படுகின்றது.

மேலும் குறித்த வீதியினை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

தவறும் பட்சத்தில், 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் சட்டத்தின் 59(3)ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கு அமைவாக அகற்றப்படும் செலவீனங்கள் தங்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கைகளுக்கும் தாங்கள் உட்பட நேரிடலாம் என்பதனையும் அறியத்தருகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தையிட்டி காணி அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பவானி வீதி தவிசாளரால் அடையாளம் காட்டப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!