சிறைச்சாலை பேரூந்தின் மீது ‘கிளேமோர்‘ தாக்குதல் நடத்த திட்டம்!

சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.

பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட பாதாள உலகக் கும்பலே இந்த திட்டத்தை தீட்டியிருந்துள்ளது.

பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ பல சந்தர்ப்பங்களில் தன்னை தொலைபேசியில் அழைத்த கமாண்டோ சாலிந்தா, இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணல், இரண்டு கிளேமோர் குண்டுகளை கமாண்டோ சாலிந்தாவிடம் கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகி இருந்துள்ளனர்.

ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, ​​நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டதால் ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு கேமராவில் துப்பாக்கியை பொருத்தி அதை செயல்படுத்துவதன் மூலம் ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் முன்பே தெரியவந்தது.

தாக்குதலில் ஈடுபடவிருந்த நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் முன்னர் கைப்பற்றப்பட்டது. பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டவுடன், அந்த திட்டம் நிறுத்தப்பட்டது, மேலும் திட்டத்தை தயாரித்தவர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட கேமராவையும் தீயிட்டு அழித்தார்.

கமாண்டோ சாலிந்தவுக்கு ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கர்ணல், பேலிகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!