ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு: முடக்கிய அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம் தற்போது வங்கியில் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், தற்போது இந்தக் கணக்கின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்தக் கணக்கு இடைநிறுத்தப்படும் போது அதில் 44 மில்லியன் ரூபாய் பணம் காணப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பம் முதல் இந்தக் கணக்கில் மொத்தம் 82.9 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!