🔴 VIDEO தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபரொருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணும் உயிரிழந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் பெற்றோல் ஊற்றி நபொருவர் தனது வீட்டை தீ வைத்துள்ளார்.

தீயினால், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தால் படுகாயமடைந்திருந்த பெண்ணும் தற்போது உயிரிழந்தார்.

தந்தை வீட்டுக்கு தீ வைக்கும் சந்தர்ப்பத்தில் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அறிந்ததும் மகன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகனும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையில் இருந்த தகராறு காரணமாக பல சந்தர்ப்பங்களில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!