கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில எங்கு இருக்கின்றன என்பது குறித்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்றை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கண்டு கருத்த தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சில துப்பாக்கிகள் தொடர்பான தரவுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2024 ஆம் ஆண்டில் துப்பாக்கி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பிலிருந்து நிறைய தகவல்கள் தெரியவந்ததாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிகள் தொடர்பாக கடுமையான சட்டங்களைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கூறிய பிரதி அமைச்சர், தற்போது உலகின் பிற நாடுகளில் துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!