நல்லூர் ஆலய திருவிழாவில் யுவதி ஒருவரின் மோசமான செயல்!

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை , அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.

அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிசாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் , அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
கடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!
colombo
பறவை மோதியதால் அவசர நிலை: கட்டுநாயக்கவில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய துருக்கி விமானம்!
anura kumara dissanayake
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!
prison
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
jaffna
யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: காரில் வாள்கள், ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!
buddhist monk
"சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?"