இலங்கையின் 19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாய சிவப்பு எச்சரிக்கை !

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்குக் கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த மட்ட வளிமண்டலக் குழப்பம் மேலும் தீவிரமடைந்து தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.

இந்தக் குறைந்த அழுத்தப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, இலங்கைக்கு அருகில் மேற்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் தக்கத்தால், நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டின் 19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கையும், 06 மாவட்டங்களுக்கு ‘அதிகரிக்கும் அபாயத்தைக்’ குறிக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alerts) விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!