தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து என பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு அளித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், விஜய்யை ஆட்சியமைக்க அனுமதிக்கும்படி ஆளுநருக்கு பல கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என தமிழக ஆளுநர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிஜிபி-யிடம் சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான டில்லிபாபு முறைப்பாடு அளித்துள்ளார்.
விஜய்க்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலையில், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
