யாழில் ஐஸ் மற்றும் வாளுடன் சிக்கிய இளைஞர்கள்: இலஞ்சம் கொடுக்கவும் முயற்சி

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வன்முறைக் கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும், அவரிடமிருந்து அபாயகரமான வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இவர்கள், குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்துச் சம்பவத்தில் இருந்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சமீப நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!