கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து: 17 மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்!

கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilankan airlines
சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்குதல்; 40 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!
Sangeetsan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு 23 இல்!
negombo protest
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு இடையூறு விளைவிக்காதே: நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்!
srilanka weather
காங்கேசன்துறை - கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்
yositha rajapaksha
கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!
சசி வீரவன்ச
சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!