A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த பாரவூர்தி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 25 வயதுடைய இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்து மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!