மூன்று நாட்களில் பதிவான 215 கடுமையான மண்சரிவுகள்!

இலங்கையை டிட்வா புயல் தாக்கிய மூன்று நாட்களில் சுமார் 215 கடுமையான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலேயே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில், பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே, சில தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிவடைந்துள்ளதாகவும், அவற்றுக்கு அணுகல் வீதிகள் இல்லை எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களைச் சீரமைப்பதற்கு கணிசமான காலம் தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். வான்வழி படங்கள் மூலம் சிறிய நிலச்சரிவுகளை அடையாளம் காண்பது கடினமானது.

இந்த நிலையில், பல்வேறு இடங்களைக் கண்காணிப்பதற்கு, 55 பேர் கொண்ட குழு நியமித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!