முல்லைத்தீவில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் அவரின் உடலம் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்திக் கொண்டிருந்த போது, கடந்த 28 ஆம் திகதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழில் உறவுக்கார இளைஞரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!
police
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு: விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்
police arrest
திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்
death
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயம் : நிதியமைச்சின் அதிகாரி உயிர்மாய்ப்பு!
CID
நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டைக் குடியுரிமை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு!
teacher arrest
காலிப் பகுதியில் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது