கியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார இன்று (19) சபையில் தெரிவித்தார்.

இந்த முறைகேடு குறித்து அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

எனினும், கியூ.ஆர். குறியீடு தொடர்பான அனைத்து தொழில்நுட்பப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருவதால், இன்றைய தினத்திலிருந்து இவ்வாறான மோசடிகளுக்கு இடமிருக்காது என அவர் உறுதியளித்தார்.

கியூ.ஆர். முறைமை முழுமையாகச் சீரடைந்தவுடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழில் வீதியில் விழுந்து கிடந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த பார்த்தீபன்!
archuna ramanathan
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாடு: விளக்கமறியலில் இருந்த பெண்ணுக்கு பிணை!
trump
தங்க கையெழுத்து… ட்ரம்ப்பின் முகம்… அமெரிக்க கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம்?
archuna ramanathan
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!
jaffna
யாழ். நாகர்கோவில் - நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்!
trincomalee
சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை வழக்கு: விசாரணைகள் முடிவுக்கு வந்தன