முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு ஒன்றின்போது சான்றுப்பொருளினை மாற்றியமைத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2024 ஆம் ஆண்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவர் மணல் கடத்தல் வழக்கின்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு உழவு இயந்திரத்தினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சான்றுப்பொருளை மாற்றியமை தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அன்றைய காலத்தில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்துள்ளார்.
தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் (23.06.2026 )அன்று கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை (02.07.2026) அன்றுவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தவிட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.
