தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) குறுஞ்செய்தி(SMS) தளம் ஹேக் செய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு பயனாளர்கள் சமூக ஊடகங்களில் கூறியதுபோல,
“உங்கள் வாட்டர்போர்டு கணக்கு ஹேக் செய்யப்பட்டது. உங்கள் தரவை மீட்பதற்கு 1.5 பிட்ட்காயின் கொடுக்க வேண்டும்” என்றொரு செய்தியை, அதிகாரப்பூர்வ NWSDB குறுஞ்செய்தி(SMS) மூலம் பெற்றுள்ளனர்.

இந்த செய்தி, NWSDB வழக்கமாக பில்கள் மற்றும் புகார் தகவல்களை அனுப்பும் போர்ட் இலக்கத்திலிருந்து வந்திருப்பது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எந்தவொரு தரவுகளும் கசிய்ந்ததா என்பதற்கான உறுதி இல்லை.
அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பயனாளர்கள் அந்தச் செய்திக்கு பதிலளிக்காமல், சந்தேகத்துக்கிடமான எந்தச் செயலையும் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.