வெள்ளவத்தை: ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காவலாளர் உயிரிழப்பு

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் அமைந்துள்ள ஐந்து மாடி உயரமான கட்டிடத்தொன்றிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இராசையா தவராசா என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் ஒரு வர்த்தகரின் வீட்டில் காவலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று (ஜூன் 4) காலை, மேல் மாடியில் உள்ள நடைபாதை அருகில் மர கைப்பிடியுடன் கூடிய சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!