வெள்ளவத்தை: ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காவலாளர் உயிரிழப்பு

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் அமைந்துள்ள ஐந்து மாடி உயரமான கட்டிடத்தொன்றிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இராசையா தவராசா என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் ஒரு வர்த்தகரின் வீட்டில் காவலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று (ஜூன் 4) காலை, மேல் மாடியில் உள்ள நடைபாதை அருகில் மர கைப்பிடியுடன் கூடிய சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்