யாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் இலக்க விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இதன்போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாடு, பொருத்தமற்ற வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அச்சுறுத்தியுள்ளார்.

அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகஸ்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலை நடாத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!