🔴 PHOTO தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவியுங்கள்.. யாழில் உண்ணாவிரதம்!

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து ஏற்பட்ட சரச்சைகளை தொடர்ந்து, கட்சி உறுப்பினர்கள் சிலரால் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்தவர்கள் சுமந்திரன் அணியினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எனினும், பகிரங்க மேடைகளில் சுமந்திரன் அதை மறுத்து வருகிறார்.

இந்த நிலைமையில், கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான ஜீவராசா (ஜீவன்) என்பவர் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவிடத்தின் முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!