🔴 UPDATE தலைவெட்டப்பட்ட பெண்ணின் இறுதிகிரியை தொடர்பில் வெளியான தகவல்

கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியை: கிராமமே சோகமயம்

கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியைகள் வவுனியா நெடுங்கேணி அனந்தர்புளியங்குளம் நொச்சிக்குளத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த ஆசிரியரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்று (04.06) மதியம் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று (05.06) இறுதி கிரியைகள் நடைபெற்ற நிலையில் பெருந்திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது நொச்சிகுளம் கிராமமே சோகத்தில் முழ்கியிருந்தது.

என்ன நடந்தது? கணவரின் வாக்குமூலம்

வயிற்றில் இருந்த கரப்பமே வவுனியா ஆசிரியையின் தலையை வெட்ட காரணம் – அதிர்ச்சித் தகவல்கள்

சுவர்ணலதா என்ற 32 வயதான நைனாமடு அரச பாடசாலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

@a7tv.com

மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல் 🔴READ MORE – https://a7tv.com/shocking-information-is-the-reason-why…/ a7tvnews a7tv srilankanewstamil srilankannews srilankatamilnews srilankanews srilankalatestnews srilankanewstoday news srilankanewstoday breakingnewssrilanka srilankanews srilankanewslive srilankalatestnews srilankanewstamil srilankatamilnewstoda#tranding #viralnews #srilankatiktok #viralvideos

♬ original sound – A7tv – A7tv

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் தனது மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி விழுந்ததன் பின்னர் தான் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தை துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தினால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News – vasantharupan

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்